தமிழ் சினிமாவில் பிரபல மற்றும் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. சில காரணத்தினால் கடந்த 2 வருடங்களாகத் திரையுலகிருந்து சற்று விலகி இருக்கிறார். சமூகவலைத்தளங்களில் எப்போதுமே ட்ரெண்டிலே உள்ளார். வடிவேலும் சிங்கமுத்துவும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள் இவர்களும் இருவரும் ஒன்றாக சில படங்களிலும் நடித்துள்ளனர். ஆனால், இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.
நில மோசடி
தன நடிப்பாலும், உடல் தோற்றத்திலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வைத்திருப்பவர் நடிகர் வைகைப்புயல் வடிவேலு. சில வருடங்களாக எண்த படங்களிழும் நடிக்காத போதும் அவருடைய நடிப்புகளும் உடல் பாவங்களும் தான் இன்று மீம்ஸ்களாக சமூகவலைத்தளங்களை கலக்கிக் கொண்டிருக்கின்றன. பலரின் கஷ்டத்தையும் சோகத்தை மறக்கச் செய்து காயத்திற்கு மருந்தாக சிரிப்பாக மாறவைப்பவர் வடிவேலு. இவருடன் பல படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் சிங்கமுத்து. சில காரணத்தினாலும் நில மோசடி மற்றும் கருத்துவேறுபாடினால் இவர்களுக்குள் பிளவு ஏற்பட்டது. இவர்கள் சம்பந்தப்பட்ட நில மோசடி தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மனோபாலா சிங்கமுத்து மீது புகார்
மே மாதம் 19-ம் தேதி வடிவேலு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் சிங்கமுத்து, மனோபாலா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனுப்பியுள்ளார்,அதில் அவர் என்ன கூறியிருந்தார் என்றால் “நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.
அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்”.இவ்வாறு வடிவேலு தெரிவித்துள்ளார்.
மனோபாலா விளக்கம்
இதனை அறிந்த மனோபாலாஅதற்க்கு விளக்கமளித்துள்ளார் மனோபாலா கூறுகையில் “எனது யூ-ட்யூப் சேனலில், சிங்கமுத்து பல விஷயங்களை பேசியுள்ளார். வடிவேலுவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது எண்ணமல்ல நடிகர் வடிவேலு ஒரு மிக பெரிய மகா கலைஞன் அவரது நட்பை இழக்க நான் தயாராக இல்லை.இதனை வடிவேலு புரிந்துக் கொள்வார் என நினைக்கிறேன். அவர் கோபம் தனிய காத்திருக்கிறேன். என்னை வடிவேலு நிச்சயம் புரிந்துக் கொள்வார் என நம்புகிறேன். நடிகர் சங்கம் வடிவேலு புகார் மீது நடவடிக்கை எடுக்க முன்வந்தால், என் தரப்பு விளக்கத்தையும் அளிக்க தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறேன் என கூறியுள்ளார்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |