வெப் தொடர்களில் நடிக்கும் வடிவேலு – முன்னணி ஓடிடி நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை.!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் சில காரணங்களுக்காக 2 வருடங்கள் திரைப்படங்கள் எதிலும் நடிக்கவில்லை. இருந்தபோதிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் குறையவே இல்லை. தற்போது அவர் அடுத்ததாக வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடிவேலு

மேலும் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அவர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

Producers Council Bans Popular Comedian

எனவே கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி அவருக்கு வாய்ப்பு அளிக்க பட அதிபர்கள் தயங்கினர். இதனால் வடிவேலு கடந்த 2 வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.

வெப் தொடர்

தற்போது அவரை வெப் தொடரில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக முன்னணி ஓடிடி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும், வடிவேலுவுக்கு பெரிய தொகையை சம்பளமாக தர அந்நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அது முழுக்க முழுக்க காமெடி தொடராக உருவாக இருக்கிறதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here