நாடெங்கிலும் தற்போது கொரோனா பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதற்கான தடுப்பு மருந்தை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்டுபிடித்து வருகின்றனர். மேலும் இந்த கொரோனாவை எதிர்க்க நோய் எதிர்ப்பு சக்தியே முதலில் தேவை. இதை கட்டுப்படுத்தும் மூலிகை தேநீர் ஒன்றை பாரம்பரிய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
மூலிகை தேநீர்
கொரோனா தொற்றில் இருந்து இந்த மூலிகை தேநீர் குடிப்பதன் மூலம் தற்காத்து கொள்ளலாம் என பரணம்பறியா மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கொரோனா பாதித்தவர்களுக்கு பாரம்பரிய முறையிலான சிகிச்சை மற்றும் உணவு பொருட்களை அளித்ததில் மூலம் அதிலிருந்து மீள பெரும் உதவியாக இருந்தது என கூறியுள்ளனர்.
தேவையான பொருட்கள்
மூலிகை தேநீர் செய்ய தேவையான பொருட்கள் – சுக்கு 100கிராம், அதிமதுரம் 100கிராம், சிற்றரத்தை 30 கிராம், கடுகை தோல் 30 கிராம் , மஞ்சள் தூள் 30 கிராம், திப்பிலி 5 கிராம், ஓமம் 5 கிராம், கிராம்பு 5 கிராம், மிளகு 5 கிராம் போன்றவற்றை அரைத்து கொள்ளவும்.
செய்முறை
அரைத்து வைத்த பொடிகளை 400 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து 100 மில்லி லிட்டர் ஆகும் வரை சண்ட காய்ச்சவும். இப்பொழுது மூலிகை தேநீர் தயார். இதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தொடர்ந்து பருகி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |