பிரபல ஐடி நிறுவனமான காக்னிசன்ட் 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்து வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இதனால் அதன் ஊழியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
ஐடி நிறுவனம்:
கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை கடுமையாக முடங்கியுள்ள காரணத்தால் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளன. ஏற்கனவே ஸ்விகி, ஜொமாடோ, உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. ஏற்கனவே தங்களது பெரும்பாலான கிளைகளில் மேலதிகாரிகளின் சம்பளத்தை 25% பிடித்தம் செய்த கான்சிசன்ட் நிறுவனம் தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
அந்த வகையில் அந்நிறுவனத்தில் பணியாற்றும் இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், துணைத் தலைவர், மேலதிகாரிகள் உள்ளிட்ட 400 பேரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் 2.90 பணியாளர்களைக் கொண்டுள்ள கான்சிசன்ட் நிறுவனம் நிறுவனத்தின் நிதி நிலையை சரி செய்ய இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.
கான்சிசன்ட் நிறுவன கொள்கைகளின் படி ‘தன்னார்வ பிரிப்புத் திட்டத்தின்’ கீழ் எந்தவித ப்ராஜெக்டிலும் ஈடுபடாத 400 ஊழியர்களை பணி நீக்கம் செய்து வெளியேற்ற முடிவு செய்துள்ளது. தாமாக முன்வரும் ஊழியர்கள் நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |