குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் இதில் விடுக்கப்படவில்லை.
அடுத்த சில நாட்களுக்கு கனமழை:
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தென்கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனை தொடர்ந்து அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தென்கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி கணினியிலும் வீடியோ & ஆடியோ கால் பேசலாம்!!
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி பகுதியில் 11 செ.மீ., ராமநாதபுரம், பரங்கிப்பேட்டை பகுதிகளில் 7 செ.மீ, சிவகங்கை மற்றும் குடவாசல் பகுதிகளில் 6 செ.மீ, குறைந்தபட்சமாக அய்யம்பேட்டை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.