சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் மூன்றாவது நாளாக சித்ராவின் கணவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பல்வேறு மர்மங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றனர்.
சீரியல் நடிகை தற்கொலை வழக்கு:
முதலில் விஜேவாக அறிமுகமாகி பின் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து தற்போது முல்லை என்ற பெயரில் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் நடிகை சித்ரா.புதன் அன்று அதிகாலை சென்னையில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இவருடன் அவருடைய நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை ஹேமந்த் என்பவரும் இருந்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் சித்ராவின் கணவர் ஹேமந்திடம் தொடர்ந்து மூன்றாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் தனக்கும் சித்ராவிற்கும் ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன் திருமணம் முடிந்துவிட்டதாக தகவல் அளித்தார். தற்போது தனியார் தொலைக்காட்சி சீரியலில் முல்லையாக சித்ராவும் அவருடைய கணவராக சக நடிகரும் காதல் காட்சிகள், முத்த காட்சிகள் போற்றவற்றில் நடிப்பது ஹேமந்திற்கு பிடிக்கவில்லை என சண்டை போட்டதாக கூறப்படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதனால் தான் அவர் ஹேமந்த் வீடு அருகில் இருந்தாலும் நசரத்பேட்டை அருகேயுள்ள தனியார் சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளார். தன் மகளிடம் அடிக்கடி சண்டை போடுவதால் சித்ராவின் தாயார் ஹேமந்த் மீது கோபத்தில் இருந்துள்ளார். அதன் வெளிப்பாடாக தன சித்ரா தற்கொலை குறித்து அவரது தாயார் ஹேமந்த் மீது புகார் தெரிவிப்பதாக போலீஸார் சந்தேகம் அடைகிறார்கள்.
இன்று நசரத்பேட்டை காவல்நிலையத்திற்கு இன்று பிற்பகல் அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்யன் சென்று, ஹேமந்திடம் 1 மணி நேரமாக விசாரணை நடத்தினார். சித்ரா தற்கொலை குறித்த மர்மங்கள் விரைவில் வெளிப்படும் என அவர் தெரிவித்தார்.