சீனா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய தியான்வென்-1 ரோவர் விண்கலம், வெற்றிகரமாக செவ்வாய்கிரகத்தில் தரையிறங்கி மிகப்பெரிய விண்வெளி சாதனையை படைத்துள்ளது . செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்புக் குறித்து இந்த தியான்வென்-1விண்கலம் ஆய்வு செய்து புகைப்படங்களை , பூமிக்கு இந்த விண்கலம் அனுப்ப உள்ளது. இந்த செய்தியை சீனா அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.
இந்த தியான்வென்-1 விண்கலமானது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. 6 சக்கரங்களைக் கொண்ட ரோவர் கருவியுடன் கூடிய இந்த விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும். ஏற்கனவே சீனா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ளது. அதே போல நிலவை ஆய்வு செய்வதற்கு விண்கலங்களை அனுப்பியும் சாதனை படைத்துள்ளது.
முதன்முதலாக அமெரிக்கா 1976ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9 முறை செவ்வாய்கிரகத்தில் தனது விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கி உள்ளது. 1971ல் சோவியத் யூனியனின் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிரக்கப்பட்டது . தற்போது சீன விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது, அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியில் முதல் சாதனைப் படி என்று வரவேற்கப்படுகிறது.