அடுத்த அதிர்ச்சியாக சீன அரசு நமக்கு சொந்தமான பகுதிகளை ஆக்கிரமித்து உள்ளது செயற்கை கோள் மூலம் தெரிய வந்து உள்ளது.
மோதல்:
கடந்த சில நாட்களுக்கு முன்னால் சீன ராணுவம் நம் எல்லை பகுதியான லடாக் பகுதியில் அத்துமீறி உள்நுழைந்து மோதலை ஏற்படுத்தியது. கடந்த ஜூன் மாதம் நம் எல்லை பகுதியில் உள்நுழைந்த சீன ராணுவம் நம் வீரர்களுடன் மோதலை ஏற்படுத்தியது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இதனால் நம் ராணுவ வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.சீனாவின் மண்ணாசை எதிரொலியாக அதன் அண்டை நாடுகள் அனைத்துடனும் மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறது.
இந்தியா மட்டுமல்ல, ஜாப்பானின் சில தீவுகள், ரஷியா, தாய்வான், வியட்நாம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் எல்லை நிலப்பரப்புகளிலும் சீனா தீவிரமாக கண் வைத்து வருகிறது. சமாதான பேச்சுவார்த்தை என்று கூறிக்கொண்டு இந்த வேலைகளை பார்த்து வருகிறது, சீனா.
செயற்கை கோள் புகைப்படம்:
இந்த நிலையில் செயற்கை கோள் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது, அதில் சீன அரசு நம் எல்லை பகுதியில் 423 மீட்டர் தூரம் வரை அவர்களது ராணுவம் உள்நுழைந்து உள்ளது தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் ‘அன்லாக் 2.0’ – எந்தெந்த சேவைகளுக்கு அனுமதி? முழு விபரங்கள் இதோ!!
சீன ராணுவம் அந்த பகுதியில் 16 கூடாரங்கள், ஒரு பெரிய தங்குமிடம் மற்றும் 14 வாகனங்களை நிறுத்தி வைத்து உள்ளது, அந்த புகைப்படத்தில் காண முடிகிறது. சீன அரசு இன்னும் திருந்தியபாடாக இல்லை.