உலக நாடுகள் அனைத்திலும் தற்போது கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் மக்களை பாதித்து வரும் நிலையில் தற்போது சீன நாட்டில் கொரோனா வைரஸின் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ்:
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீன நாட்டில் முதன்முதலாக கண்டறியப்பட்டு வந்தது கொரோனா வைரஸ் தொற்று. அங்கு இருந்து பரவ தொடங்கிய இந்த வகை வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தற்போது அனைத்து உலக நாட்டிலும் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் அமலில் இருந்து வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளும் தீவிரமாக இருந்து வருகிறது. எந்த உலக நாடும் இதுவரை கொரோனாவில் இருந்து முழுவதுமாக மீளவில்லை என்பது வேதனைக்குரியதே. இதன் காரணமாக தற்போது அனைத்து உலக நாட்டிலும் கடுமையான ஊரடங்கு உத்தரவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீன நாட்டு அரசு அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் – ஒரே நாளில் 4,194 பேர் பலி!!
அதன்படி சீன நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. மேலும் நேற்று முன்தினம் பாதிப்பின் எண்ணிக்கை 24 ஆக இருந்த நிலையில் தற்போது 10 ஆக குறைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.