தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், இந்திய விமானங்களுக்கான தடையை கனடா அரசு இன்னும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்துள்ளது. எனவே தற்போது ஜூன் 21 ஆம் தேதி வரை இந்திய விமானங்கள் கனடாவிற்கு செல்ல அனுமதி இல்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கனடாவின் போக்குவரத்து அமைச்சர் உமர் அல்காப்ரா, நேற்று விமானத்தடைக்கான இந்த அறிவிப்பை வெளியிட்டார். கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக விமானத் தடையை நீட்டிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தியாவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால் கனடா முதல் முறையாக ஏப்ரல் 22 ஆம் தேதி இந்திய விமானங்களுக்கான தடை விதித்தது.
கனடாவில் இதுவரை மொத்தம் 1.3 மில்லியன் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 25,111 க்கும் மேற்பட்டோர் இத்தொற்றுநோயால் இறந்துள்ளனர். மேலும் கனடா அரசு தற்போது பாகிஸ்தான் விமானங்களுக்கும் தடை விதித்துள்ளது. ஏற்கனவே இந்திய பயணிகளுக்கு ஜெர்மனி, இத்தாலி, மாலத்தீவு, வங்காளதேசம் ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன.
இந்தியாவில் இரட்டை உருமாற்ற கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பல நாடுகள் இந்திய பயணிகளுக்கும், இந்திய விமானங்களுக்கு தடை விதித்து வருகின்றனர். தற்போது கனடா அரசும் ஏற்கனவே உள்ள தடையை ஜூன் 21 ஆம் தேதி வரை நிடித்துள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!