சீனாவின் அடனோவைரஸ் கோவிட் 19 தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடியது என மனிதர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வின் மூலம் வெற்றிகரமாக கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி:
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே நடுநடுங்கி போய் உள்ளது. உலக நாடுகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை உயிரிழப்புகளை குறைப்பது என்பது சாத்தியமற்றது. இதனால் உலக நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் அந்த முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். சீனாவில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது. ஆனால் அங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உயிரிழப்புகள் அதிகளவில் நிகழாமல் தடுக்கப்பட்டு உள்ளது. எனவே அவர்கள் தான் முதலில் இதற்கு தடுப்பூசி கண்டறிவார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சீனாவின் அடனோவைரஸ் கோவிட் 19 தடுப்பூசி கொரோனாவிற்கு எதிராக பாதுகாப்பான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதாக மனிதர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கான பரிசோதனை சீனாவின் வுஹான் நகரில் 18 முதல் 60 வயதிற்கு உட்பட்ட 108 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. இந்த முதற்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற நபர்களுக்கு உடல்வலி, காய்ச்சல், மயக்கம், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததாகவும், இந்த பக்கவிளைவுகள் 48 மணிநேரத்திற்கும் குறைவாகவே இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட 28 நாட்கள் வரை எதிர்மறையான பக்கவிளைவுகள் அல்லது பாதிப்புகள் ஏற்படவில்லை என அது குறித்த ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் இரண்டாம் கட்ட சோதனை 250 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி அடுத்த 6 மாதங்களுக்கு ஏதேனும் எதிர் விளைவுகள் ஏற்படுகிறதா என சோதனை செய்யப்பட உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |