நாடு முழுவதும் வாகன ஓட்டிகள் சிலர், போக்குவரத்து விதிமுறைகளை மீறி விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமானோர் கை, கால் இழந்தும் சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் டிராபிக் சிக்னலில் அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன்மூலம் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன எண்களை கண்டறிந்து சம்பந்தப்பட்ட உரிமையாளர் வீட்டுக்கு அபராத செலான் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் வாகன உரிமையாளர் தனது நண்பர்களின் அவசர தேவைக்காக கொடுத்து விட்டு இப்படியான அபராதத்தை கட்ட நேரிடுகிறது. இதனை தடுக்கும் விதமாக சென்னை போக்குவரத்து காவல்துறை, மோட்டார் வாகன விதி 1989 ல் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர் காவல்துறையிடம் உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும். பின்னர் அந்த பகுதிகளில் உள்ள அதிநவீன சிசிடிவி கேமரா கொண்டு சோதனை செய்த பிறகு உங்களுக்கான தண்டனைகளில் இருந்து தப்பிக்கலாம் என தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் உதவி செய்ததற்காக தண்டனை அனுபவிக்க தேவையில்லை எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.