நடப்பு ஆண்டுக்கான IPL தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை CSK அணி 2 போட்டிகளில் விளையாடி வெற்றியை தட்டிச் சென்ற நிலையில் இன்று மூன்றாவது போட்டியில் டெல்லி கேப்பிடல் அணியை சந்திக்க உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த போட்டியிலும் CSK அணி வெற்றி பெற்றுவிட்டால் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் அதற்கு டெல்லி அணி இடம் கொடுக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதனால் இன்று நடைபெறும் சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.