இந்திய சினிமா துறையில் முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிலம்பரசன். தற்போது இவர் ”பத்து தல” என்ற திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இப்படம் இன்று தமிழகம் முழுவது காலை 8.30 மணிக்கு அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. இந்நிலையில் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர்கள் படம் பார்க்க சென்ற போது அவர்களை உள்ளே விடாமல் மறுத்துள்ளனர். இந்த செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து நரிக்குறவ பெண்ணிடம் தனியார் சேனல்கள் பேட்டி எடுத்துள்ளனர்.
தமிழக அரசின் இந்த பஸ் ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு.., அமைச்சர் அதிரடி!!!
அதில் அவர் கூறியதாவது, இப்படத்தை பார்ப்பதற்கு நாங்கள் டிக்கெட்டுடன் வந்த போது தியேட்டர் ஊழியர் எங்களை அனுமதிக்கவில்லை. மேலும் சில மாதங்களுக்கு முன் வெளியான விஜயின் வாரிசு படத்தை பார்க்க வந்தோம். அப்போதும் இதே போன்று நாங்கள் நரிக்குறவர் என்பதால் எங்களை படம் பார்க்க தியேட்டற்குள் விடவில்லை. இது போன்று தொடர்ந்து நடைபெறுவது வருத்தமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.