போக்குவரத்துக்கு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ல் இருந்து 58 ஆக குறைக்க உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சிவசங்கர்
தமிழக சட்டசபையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறைக்கான மானியக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று போக்குவரத்துக்கான மானிய கோரிக்கையை அமைச்சர் சிவசங்கர் சட்டசபையில் தெரிவித்தார். இதில் பல திட்டங்களை அறிவித்த இவர் போக்குவரத்துக்கு ஊழியர்களுக்கு சாதகமான பல திட்டங்களையும் தெரிவித்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது கொரோனா போன்ற காலங்களில் ஏற்பட்ட நிதி நெருக்கடி பொருளாதார சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ல் இருந்து 60 ஆக உயர்த்தினர். ஆனால் தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மீண்டும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து வேலை பார்த்து வருவதால் அவர்களுக்கு நீரிழிவு, பார்வை மங்கல், இதய பிரச்சனை, நரம்பு கோளாறுகளால் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அடிக்கடி மெடிக்கல் லீவ் கேட்கின்றனர். இப்படி தொடர்ந்து விடுமுறை கேட்பதால் போக்குவரத்து துறைக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
இரண்டாவது மனைவியுடன் இருக்கும்போது முதல் தாரத்தை பற்றிய பேசிய சரத்குமார்.., எல்லாமே லவ் தானே!!
இதை கருத்தில் கொண்டு தான் இப்போது ஓய்வு பெறும் வயதை குறைந்துள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இப்போது போக்குவரத்து ஊழியர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.