சென்னை ஓபன் டென்னிஸ்.., அரையிறுதிக்கு முன்னேறிய 17 வயது சிறுமி.., விருது வென்று அசத்தல்!!

0
சென்னை ஓபன் டென்னிஸ்.., அரையிறுதிக்கு முன்னேறிய 17 வயது சிறுமி.., விருது வென்று அசத்தல்!!
சென்னை ஓபன் டென்னிஸ்.., அரையிறுதிக்கு முன்னேறிய 17 வயது சிறுமி.., விருது வென்று அசத்தல்!!

ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி ஆட்டத்தில் இளம் சிறுமி, ரஷ்யாவின் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

லிண்டா ஃப்ருஹ்விர்டோ

சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி ஆட்டத்தில் கனடாவின் யூஜெனி பவுச்சார்ட், நதியா பொடோர்ஸ்காவை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் நதியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை தொடர்ந்து மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் லிண்டா ஃப்ருஹ்விர்டோவா, வார்வரா கிரச்சேவாவுடன் மோதினார். இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஃப்ருஹ்விர்டோவா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதன் மூலம் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் லிண்டா வெற்றி பெற்று அசத்தியுள்ளார். மேலும் இந்த ஆட்டத்தில் அவர் சிறப்பாக விளையாடியதன் மூலம் “நம்பிக்கைக்குரிய இளம் வீராங்கனை” என்ற விருதை பெற்றார். இதை தொடர்ந்து அரையிறுதி ஆட்டத்தில் லிண்டா, அர்ஜென்டினாவின் நதியா பொடோர்ஸ்காவை மோத உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here