தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல குடியிருப்புகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது ஒருபுறம் இருக்க சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் அப்பகுதியில் உள்ள 9,001 குடும்பங்கள், வீடுகள் என பெருத்த சேதம் ஏற்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
இதனை கருத்தில் மீனவ கிராமங்களை சேர்ந்த 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரண நிதி வழங்க உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500யும், மீன்பிடி படகுகளை சரிசெய்ய படகு ஒன்றுக்கு தலா ரூ.10,000மும் நிவாரணமாக வழங்க ரூ.8.68 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தில் காய்கறிகள் விலையில் அதிரடி மாற்றம்…, ஒரு கிலோ நிலவரத்தின் முழு விவரம் உள்ளே!!