தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சாலை விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க சிசிடிவி, விழிப்புணர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சூழலில் கடந்த 2023ஆம் ஆண்டில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் புள்ளிவிவரம் வெளிவந்துள்ளது.
அதன்படி சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரே எண்ணிக்கையில் 3,642 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. அதில் சென்னையில் 500 பேரும், கோவையில் 1040 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். சென்னையில் உயிரிழப்பு குறைவானதற்கு, விரைவான அவசர கால சிகிச்சை தான் காரணம் என கூறப்படுகிறது.