அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் கூட விண்கலங்களை அனுப்ப முடியாத நிலவின் தென் துருவ பகுதிக்கு, இந்தியாவின் இஸ்ரோ “சந்திரயான் 3” விண்கலத்தை நேற்று (ஆகஸ்ட் 23) வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு பின்புலமாக நாமக்கல் மாவட்டத்தின் சித்தம்பூண்டி கிராமப்பகுதி இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த கிராமப்பகுதியில் உள்ள மணல் போன்ற அனார்த்தசைட் பாறை தான் நிலவிலும் உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
எனவே சந்திராயன் திட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்த கிராமத்தில் உள்ள பாறைகளை துகள்களாக்கி விண்கலத்தை தரையிறக்குவது போல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையே தற்போது உலக சாதனையாக மாறியுள்ளது என கூறப்படுகிறது. மேலும் வெற்றிகரமாக லேன்டிங் செய்யப்பட்ட விக்ரம் லேண்டரில் இருந்து “பிரக்யான் ரோவர்” சிறப்பாக பிரிந்து வந்தது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து வீழ்ச்சி அடையும் தக்காளி விலை.., மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதா?? வெளியான தகவல்!!!