இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகப்பெரிய வரலாற்று சாதனையை ஆகஸ்ட் 23ஆம் தேதி நிகழ்த்தி உள்ளனர். பல வளர்ந்த நாடுகள் கூட விண்கலங்களை அனுப்ப முடியாத நிலவின் தென்துருவ பகுதியில் இஸ்ரோ “சந்திரயான் 3” விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கி உள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுவதற்கு பிரதமர் மோடி நேரில் சென்றிருந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அப்போது அவர் விஞ்ஞானிகளை பாராட்டியதோடு, “இந்த விண்வெளி சாதனை இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருக்கும். “சந்திரயான் 3” திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாக உள்ளது. எனவே நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடம் “சிவசக்தி” என்றழைக்கப்படும். இது இமயம் முதல் குமரி வரையிலான இந்தியர்களை ஒன்றிணைக்கும் பெயராகவும் இருக்கும்.”என தெரிவித்துள்ளார்.
இது என்னடா தக்காளி வந்த சோதனை.., ரோட்டில் கொட்டப்படும் அவலம்.., விவசாயிகள் வேதனை!!!