தமிழகத்தில் தக்காளி விலை கடந்த மாதம் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இதனால் விவசாயிகள் மிகவும் லாபம் பார்த்தனர். ஆனால் தற்போது அதற்கு மாறாக தக்காளி விலை நாளுக்கு நாள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை தற்போது 30 க்கும் கீழ் சரிந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதே போன்று கோலாரில் ஒரு கிலோ தக்காளி 23 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் விலை குறைந்தாலும் தக்காளி வரத்து அதிகரிப்பால் விற்பனை குறைந்து ரோட்டில் கொட்டப்படும் அவலம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒரு பக்கம் தக்காளி ஒரு விலை குறைந்தது இல்லத்தரசிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும்,விவசாயிகளுக்கு சற்று வருத்தத்தை தான் தந்துள்ளது.