பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக சண்டிகர் அரசு அறிவித்துள்ளது.
சண்டிகர்
கடந்த சில வருடங்களாக கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இப்போது தான் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் அண்மையில் கூட தீபாவளியை முன்னிட்டு ஒரு சில மாநில பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டது.
2500 பேர் திடீர் பணி நீக்கம்.,, அதிரடி முடிவை எடுத்த Sales Force நிறுவனம்., ஊழியர்கள் ஷாக்!!
இதன் பிறகாவது பள்ளிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என்று எதிர்பார்த்த நேரத்தில் மழை காரணமாக சில மாநிலங்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் இப்போது சண்டிகர் மாநிலத்தில் ஜிலா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து போர்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக வரும் நவம்பர் மாதம் 22 மற்றும் 25ம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த தேர்தலை முன்னிட்டு ஃபரிதாபாத், ஃபதேஹாபாத், ஹிசார் மற்றும் பல்வால் ஆகிய 4 மாவட்டங்களில் செயல்படும் அரசு அலுவலகங்கள், மாநகராட்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சண்டிகர் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.