கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கூட சென்னை திருவொற்றியூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போன்று தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழக சுற்றுலா பயணிகளே உஷார்…, தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா…, போலீசில் பிடிபட்ட மர்ம நபர்!!