நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி, அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகை அறிவிப்புகளை மத்திய மாநில அரசுகள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டது. இதன்மூலம் சுமார் ஒரு கோடி பேர் பயனடைந்த நிலையில், மீண்டும் சலுகை அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டு வாடகை படி (HRA), பயணப்படி (TA), குழந்தை கல்வி சலுகை, பிரதிநிதி சலுகை, சுற்றுப்பயண சலுகை, ஓய்வூதியதாரர்களின் மருத்துவ சலுகை, விடுப்பு பணம், உயர் தகுதி சலுகை உள்ளிட்டவைகளின் பணப்பலன் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழகத்தில் திடீரென நிறுத்தப்படும் மக்களவைத் தேர்தல்?? காரணம் இதுதான்!!!