இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 137 ரன்கள் குவித்தது. அதிகபட்சமா ஷ்ரேயாஸ் ஐயர் 34 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடினர். அதன் பிறகு வந்த சிவம் துபே சிறப்பாக விளையாடி 1 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 28 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் CSK அணி 17.4 ஓவரில் 141 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Enewz Tamil WhatsApp Channel
என்னப்பா சொல்றீங்க.. விவாகரத்து நேரத்தில் இப்படி ஒரு பதிவா?? வைரலாகும் ஐஸ்வர்யாவின் இன்ஸ்டா போஸ்ட்!!