இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தடுப்பு பணிகளுக்காக ரூ. 15,000 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு 3 தவணைகள்:
இந்தியாவில் இதுவரை 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் 640 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு உள்ள ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முகக்கவசம், மருத்துவ உபரகரணங்கள் போன்றவற்றிற்கு தட்டுப்பாடு இருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ. 15,000 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த தொகையானது அடுத்த 4 ஆண்டுகளுக்கு 3 தவணைகளாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ரூ. 7,774 கோடியை உடனடியாக விடுவிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகை மருத்துவ பணியில் உள்ள அதிகாரிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் தடுப்பு பணிக்கு உபகரணங்கள் வாங்க பயன்படுத்தப்படும் என தெரிகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |