மருத்துவர்களுக்கே பாதுகாப்பு வழங்காத அரசு மக்களை எப்படி காக்கும்..? முக ஸ்டாலின் கேள்வி..!

0

கொரோனா காரணமாக அண்மையில் சென்னை சேர்ந்த மருத்துவர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு மக்கள் அனைவரும் மிகவும் வருத்தம் தெரிவித்தனர்.மற்றும் பல கட்சின் தலைவர்களும் பிரபலங்களும் வருத்தம் தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

முக ஸ்டாலின் கேள்வி

திமுக கட்சியின் தலைவரான முக ஸ்டாலின் அவர்கள் தமிழக அரசினை பார்த்து ஒரு கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார் அது என்னவென்றால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வேலை செய்யும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதியில் உள்ள மருத்துவ மாணவர்கள் ஆகியோருக்குப் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை சரியான உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சீரான முறையில் வழங்கப்படவில்லை என்றும் கூறி இன்று காலையில் போராட்டம் நடத்திய செய்தி கொரோனவை விடக் கொடூரமானது ஆகும்.

மக்களைக் காக்கும் மருத்துவர்களுக்குக் கூட போதிய வசதி இல்லை வசதி செய்துதர முடியாத அரசாங்கமா இது? இது மக்களைக் காக்கும் அரசா?என கேட்டுள்ளார்.சில ஆயிரம் மருத்துவர்களையே முறையாகக் கவனிக்க முடியாத இவர்கள், பல லட்சம் மக்களை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள் என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. கொஞ்சமும் பொறுப்பு இல்லாத மனிதர்கள் கையில் ஆட்சி சிக்கி இருக்கிறது!.சென்னை போன்ற பெருநகரில் உள்ள பொது மருத்துவமனையிலேயே இந்த நிலைமை என்றால், மற்ற மருத்துவமனைகள் பற்றிச் சொல்லத் தேவையில்லை! தமிழக சுகாதாரத் துறையின் சுவாசக்குழாய் அடைப்பை யார் அகற்றிச் சரி செய்வது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here