கொரோனா பரவல் காரணமாக அரசு ஊழியர்களுக்கு பணிக்கு வருவதற்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கியதால் மத்திய அரசு புதிதாக ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு:
கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் அனைத்து பணிகளும் முடங்கியது. நாளடைவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதன் காரணமாக அனைத்து பணிகளும் பல விதிமுறைக்கு உட்பட்டு நடக்க துவங்கியது. அலுவலகங்களுக்கு வரும் ஊழியர்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி என பல விதிமுறைகளை மத்திய அரசு விதித்தது. தற்போது அனைத்து இடங்களிலும் வேகமாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதன் காரணமாக மத்திய அரசு புதிய தளர்வு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி இனி வேலை நாட்களில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் பணிக்கு வரும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட் வாட்ச் – ஆப்பிளுக்கு ஆப்பு!!
அதுமட்டுமல்லாமல் ஊழியர்கள் அனைவரும் சமூக இடைவெளி மற்றும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டாய முறையில் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை பயோ மெட்ரிக் முறையை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது.