இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்நிலையில் சிபிஎஸ்சி மற்றும் இன்ஜினியரிங் JEE மெயின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மூன்றாம் கட்ட நடவடிக்கை:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நான்கு கட்டங்களாக அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது அந்த வைரஸின் வீரியத்தை பொறுத்து மாறுபடும்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பு..! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்வு..!
தற்போது இந்தியாவில் இதன் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில் மூன்றாம் கட்ட நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து உள்ளது. அதன்படி பல முக்கிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டோம் – ஹாலந்து விஞ்ஞானிகள் பெருமிதம்..!
சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு வரும் மார்ச் 31ம் தேதி வரை நடைபெற இருந்த அனைத்து விதமான தேர்வுகளும், பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த JEE மெயின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக மனிதவள மேம்பாட்டு ஆணையம் தெரிவித்து உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |