தமிழ் சினிமாவில் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். மேலும் தனது முதல் படத்திலேயே பல விருதுகளை அள்ளிக்குவித்தார். இது தவிர ஹிந்தி, ஆங்கில மொழி படங்களிலும் இசையமைத்து பல விருதுகளை பெற்றுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில் இவர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான ஏ.ஆர்.பிலிம் சிட்டி உள்ளது. இங்கு 5 க்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது ஏ.ஆர்.பிலிம் சிட்டியில் படம் எடுப்பதற்காக ஊழியர்கள் அங்கு தனி பணியாற்றி வருகின்றனர்.
பிரபல நடிகைக்கு ஷூட்டிங்கில் நடந்த விபத்து.., தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!
இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் அங்கு கேமராமேனாக வேலை செய்து வருகிறார். இவர் அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக 30 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். பின் அவருடன் பணியாற்றியவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.