தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்தவர் தான் ஜெயசுதா. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அரங்கேற்றம், நான் அவனில்லை, சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ள வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவரின் பர்ஸ்னல் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் ராஜேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து சில பிரச்சனை காரணமாக விவாகரத்து செய்து கொண்டு, பின் நிதின் கபூர் என்பவரை 2 வது திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் நிதின் 2017 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். பின் நடிப்பில் பிரேக் எடுத்த ஜெயசுதா பின்பு தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
சர்ச்சைகளை கடந்து வெளியாகும் ஆதிபுருஷ்.., படத்தின் வெளியீட்டு தேதியை உறுதி செய்த பிரபாஸ்!!!
இந்நிலையில் நடிகை ஜெயசுதா வெளிநாட்டு தொழிலதிபருடன் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியது. மேலும் வாரிசு பட ப்ரோமோசன் மற்றும் பல நிகழ்ச்சிகளுக்கு அவருடனே கலந்து கொண்டதாக வதந்திகளும் வெளிவந்தன. ஆனால் இதை மறுத்துள்ள ஜெயசுதா பிலிப் ரூல்ஸ் அமெரிக்கா தொழிலதிபர் என் வாழ்க்கையை படமாக எடுக்க இருப்பதாக கூறியுள்ளார்.