பிக் பாஸ் நிகழ்ச்சியில், இதுவரை எந்த சீசன்களிலும் இல்லாத வகையில் 2வது முறையாக பணப்பெட்டி டாஸ்க் மீண்டும் நடத்தப்பட்டுள்ளது.
2வது முறை:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், நேற்று நடந்த பணப்பெட்டி டாஸ்க்கில் கதிர் ரூபாய் மூன்று லட்சம் பணத்துடன் வெளியேறினார். இவர்களைத் தொடர்ந்து டாப் 5 போட்டியாளர்கள் பைனலுக்கு முன்னேறினர். இதை தொடர்ந்து, எந்த பிக் பாஸ் சீசனிலும் இல்லாத வகையில் 2வது முறையாக இந்த பணப்பெட்டி டாஸ்க் மீண்டும் நடத்தப்பட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது, நேற்று பண மூட்டை, இன்று பணப்பெட்டி, பிக் பாஸ் வரலாற்றில் இது தான் முதல் முறை என இந்த 2வது பணப்பெட்டி டாஸ்க் குறித்து பிக் பாஸ் அறிவிக்கிறார். ஆரம்பத்தில் மூன்று லட்சம் என ஆரம்பித்த இந்த தொகை, நேரம் ஆக அதிகரித்துக் கொண்டே 5,50,000 நெருங்குகிறது.
இன்ஸ்டா லைவில் ஓவியா மீது பாய்ந்த Boy Friend.., என்னடா நடக்குது அங்க.. ஷாக் வீடியோ!!
இது இன்னும் அதிகரிக்கும் என பிக் பாஸ் தெரிவித்தார். இதை வைத்துப் பார்க்கும்போது கதிர் அவசரப்பட்டு பணத்தை எடுத்து வெளியேறி விட்டதாகவும், அவர் பொறுமையாக இருந்திருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.