சமீப காலமாக நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. ஆனால் இது குறித்து விஜய் தற்போது வரை அறிவிப்பு வெளியிடவில்லை. இருப்பினும் அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இளம் வாக்காளர்களை கவரும் விதமாக 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு பாடாக சாலை அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தற்போது இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், நாளை காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு உதவும் வகையில் தளபதி விஜய் பயிலகம் என்ற பாடசாலை தொடங்க இருக்கிறது என்று கூறியுள்ளார்.