T20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியதால் மாற்று வீரரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பும்ரா விலகல்
இந்திய அணி உலக கோப்பை தொடருக்கு பயிற்சி பெறும் விதமாக ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்க அணிகளுடன் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் செட் ஆகிவிட்ட நிலையில் பந்து வீச்சாளர்கள் தான் மோசமாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா தற்போது உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவருக்கு அடிக்கடி ஏதாவது காயம் ஏற்பட்டு ஓய்வுக்கு சென்று விடுகிறார். தற்போது கூட முதுகு வலி பிரச்சனை காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து இவர் வெளியேறியதாக BCCI தெரிவித்துள்ளனர். மேலும் சிறந்த பந்து வீச்சாளரான பும்ரா அணியில் இல்லாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுல கூடவா சாதனை படைப்பீங்க., என்ன ரோஹித் இப்படி பண்றீங்க., ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளான கேப்டன்!!
இந்நிலையில் பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் BCCI உள்ளனர். அதன்படி பார்த்தால் உமேஷ் யாதவ், உம்ரான் மாலிக், நடராஜன் ஆகியோர் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இது குறித்த எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.