பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று மேற்கு காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் குண்டுவெடிப்பு:
தமிழகத்தில் சமீபகாலமாக முக்கிய பிரமுகர் வீடுகளில், மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருக்கும் பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனை தொடர்ந்து பொள்ளாச்சியில் இருக்கும் குமரன் நகர் பகுதியில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு தீ வைக்க முயற்சிக்கப்பட்டது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 6 பேரை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மேற்கு காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய இலவச திட்டம் அறிமுகம் – கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!
அதில் திரு காவல்துறை அவர்களுக்கு பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு அல்லது கையெறி குண்டு வீசப்படும் என்றும் காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல,இங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இதை செய்கிறோம் என குறிப்பிட்டு அவர்கள் எழுதியுள்ளனர். இந்த கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்