ஏய்.. ஏய் கல்யாணத்த நிப்பாட்டு.. மட்டன் இல்லாததால் கடுப்பில் வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன்!!!

0

ஒடிசா மாநிலத்தில், கல்யாண விருந்தின் போது மட்டன் கறி இல்லாததால் மணமகன் கடுப்பாகி மணப்பெண்ணுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

ஒடிசாவில் உள்ள ஜஜ்பூரரைச் சேர்ந்தவர் ராமகாந்த் பத்ரா. இவருக்கு வயது 27. இவருக்கு சுகிந்தா என்ற மற்றொரு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்தின் முதல் நாள் மணமகன் வீட்டாருக்கு , மணப்பெண் வீட்டார் விருந்து வைத்துள்ளனர். அந்த விருந்தில் மட்டன் இல்லை எனத் தெரிந்து மணமகன் வீட்டார் மணப்பெண் வீட்டாரிடம் சண்டையிட்டு உள்ளனர்.

சிறியதாக தொடங்கிய பிரச்சனை நேரம் ஆக ஆக வலுத்துள்ளது. மணமகள் வீட்டாரும் நிலைமை கைமீறி போவதை உணர்ந்து மணமகன் வீட்டாரை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். இந்த சண்டையால் ஆத்திரம் அடைந்த மணமகன் எனக்கு அந்த பெண் வேண்டாம் என்று கூறி அன்று இரவே புல்ஜாராவைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

கல்யாண விருந்தில் மட்டன் கறி இல்லை என்ற ஒரே காரணத்துக்காக மணப்பெண்ணையே வேண்டாமெனக் கூறி  வேறு பெண்ணை திருமணம் செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here