பல சீரியல்கள் மூலம் நமக்கு நன்கு தெரிந்தவர் நடிகை ஸ்ரீதேவி அசோக் குமார். இவர் சமீபத்தில் கர்ப்பம் தரித்து உள்ளார். இந்நிலையில் சீரியல் நடிப்பதை தவிர்த்து வந்தார். இதையடுத்து தற்போது அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவி ‘செல்லமடி நீ எனக்கு ‘ என்ற சீரியல் தொடங்கி இளவரசி, தங்கம், வாணி ராணி, கல்யாண பரிசு, ராஜா ராணி, காற்றுக்கு என்ன வேலி உட்பட பல சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து உள்ளார். இவர் அனைத்து வித கதாபாத்திரங்களுக்கும் கச்சிதமாக பொருந்திருப்பார். இந்நிலையில் இவர் கடந்த 2018ம் ஆண்டு அசோக் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் தனது நடிப்பை தொடர்ந்தார். தற்போது அவர் கர்ப்பமாகியுள்ளார்.
இதையடுத்து அவருக்கு அவரின் வீட்டில் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இது கொரோனா காலம் என்பதால் பிரமாண்டமாக நடத்தாமல் மிகவும் எளிமையாக நடத்தி உள்ளனர். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் திரவியம் மற்றும் அவரின் குடும்பத்தினர், சின்னத்திரை நடிகை ஸ்ரேயா உட்பட சில பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்