சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து அவரது வீட்டில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்:
அரசியலுக்கு நான் வருவது உறுதி என நீண்ட நாட்காளாக கூறி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவரது ரசிகர்களும் தலைவர் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக கூறி விட்டு, வேறு எதுவும் கூறாமல் தொடர்பை துண்டித்து உள்ளார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
வத்திக்குச்சி வனிதாவுக்கு மூன்றாவது திருமணம் – இவர்தான் மாப்பிள்ளை…!
இதனால் ரஜினிகாந்த் வீட்டிற்கு காவல்துறையினர், 2 வெடிகுண்டு நிபுணர்கள், 2 மோப்ப நாய்களுடன் சென்று தீவிர சோதனை மேற்கொண்டு உள்ளனர். ரஜினிகாந்தின் வீடு மற்றும் அதனை ஒட்டி அமைந்து உள்ள பகுதிகள் என 1 மணிநேரத்திற்கும் மேலாக சோதனை நீடித்தது. காவல்துறையின் சோதனை முடிவில் வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. எனவே அது பொய்யான தகவல் என்பதை உறுதி செய்த போலீசார், கால் செய்த மர்ம நபர் யார்? என விசாரித்து வருகின்றனர்.