பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 59வது நாளில் கால் எடுத்து வைத்துள்ளது. இந்த சீசன் மக்கள் மத்தியில் ஏக வரவேற்பை பெற்று விட்டது. முதல் நாளில் இருந்து இப்பொழுது வரை சுவாரசியம் குறையாமல் நகர்ந்து கொண்டுள்ளது. இது வரை 8 பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மேலும் இந்த சீசனில் யார் ஜெயிப்பார்கள் என்பதை கணிக்கவும் முடியவில்லை. ஏனெனில் அசிம், ரக்ஷிதா, கதிர், விக்ரமன் போன்றோர் இப்பொழுது முக்கிய இடத்தை பிடித்துள்ளனர். இப்படி இருக்க இவர்களுக்கே டப் கொடுக்கும் வகையில் முக்கிய பிரபலம் ஒருவர் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
அதற்கான தகவல் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதாவது தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்து வந்த நடிகை அஞ்சலி தான் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கவுள்ளாராம். ஆனால் அதற்கான அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.