இந்திய அணி பங்களாதேஷிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட திட்டமிட்டது. இதன் படி, முதல் போட்டியில் இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதை அடுத்து, 2வது போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த போட்டியில், டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, பங்களாதேஷின் தொடக்க வீரர்களான, அனாமுல் ஹக் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். இவர்களுக்கு எதிராக இந்திய பவுலர்கள் ஆரம்ப முதலே வேகப்பந்துகளை வீச தொடங்கினர். இதில், முகமது சிராஜ் வீசிய 2 வது ஓவரை பங்களாதேஷ் பேட்ஸ்மேன் அடிக்க அதனை, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பிடிக்க முயற்சி செய்தார்.
உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: வெள்ளிப் பதக்கத்தை தட்டி தூக்கிய மீராபாய் சானு!!
அப்போது, அந்த பந்து இவரது கையை பதம் பார்த்தது. ரோஹித்தின் கட்டை விரலில் பலத்த அடிபட்ட காரணத்தால், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்க வேண்டும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் கே எல் ராகுல் செயல்பட்டு வருகிறார்.
Update: India Captain Rohit Sharma suffered a blow to his thumb while fielding in the 2nd ODI. The BCCI Medical Team assessed him. He has now gone for scans. pic.twitter.com/LHysrbDiKw
— BCCI (@BCCI) December 7, 2022