விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 70வது நாளை கடந்துள்ளது. இந்நிலையில் வார இறுதியை தொட்டுள்ளதால் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற கருத்து பரவி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 4:
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை தொடர்ந்து எதாவது ஒரு சண்டை ஏற்பட்டு தான் வருகிறது. முதல் நாளில் இவர் இப்படி தான் என இருந்து வந்த கருத்து மொத்தமாகவே மாறியுள்ளது. ரியோ, நிஷா போன்றோர் ஜெயிப்பார்கள் என்று நினைத்தால் கடைசியில் அர்ச்சனாவின் அன்பு பிடியில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
வாராவாரம் எப்படியோ அர்ச்சனா எலிமினேஷனில் இருந்து தப்பித்து விடுகிறார். அவருக்கு யார் தான் வோட் போடுகிறார்கள் என்றும் தெரியவில்லை மேலும் ஆரம்ப காலத்தில் இருந்தே இவரின் சத்தம் மட்டும் தான் கேட்கிறது. அதற்கு மேல் அனிதா. தன் கருத்தை எடுத்து வைக்கிறேன் என்ற பெயரில் என்னன்னவோ பேசிக்கொண்டுள்ளார்.
இதனை தான அர்ச்சனா அவரது கணவர் இத்தனை வருடம் என்ன பாடுபட்டாரோ என்று கேமராவை பார்த்து சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அர்ச்சனா அங்கு காமெடிக்கு சொன்னாலும் அது கண்டிப்பாக உண்மையான ஒன்று.
‘பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க முதல்வருக்கோ, அமைச்சர்களுக்கோ நேரமில்லை’
இந்த வாரத்தில் ஷிவானி, சோம், அர்ச்சனா, ரியோ, ஆரி, அனிதா மற்றும் ஆஜித் ஆகியோர் நாமினேஷனில் உள்ளனர். ஆரிக்கு எப்பொழுதுமே மக்கள் ஆதரவு அதிகம் தான். எனவே வோட்டிங்கில் ஆரி தான் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக ரியோ உள்ளார். கடைசி இடத்தில் ஆஜித்தும், அர்ச்சனாவும் இருக்கின்றனர்.
அஜித்துக்கு அவ்வளவு ரசிகர்கள் இல்லையென்றாலும் அர்ச்சனாவை வெளியேற்ற பலரும் அஜித்துக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த வாரத்தில் வெளியேறப்போவது அர்ச்சனா தான். இந்த வாரம் எப்படியும் அர்ச்சனா தப்பித்து விட்டால், அடுத்த வாரம் அவரை நாமினேட் செய்ய முடியாது. யார் வெளியேறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.