விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 2வது நாளே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. முதல் நாள் ஷிவானியை டார்கெட் செய்து வந்தனர். நேற்று எபிசோடில் அனிதாவிற்கும், சுரேஷ்க்கும் சண்டை ஏற்பட்டது. தற்போது திரும்பவும் அனிதா மற்றும் சுரேஷ் இடையே மோதல் தொடங்கி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 4
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நாளுக்கு நாள் விறுவிறுப்பான பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. முதல் நாளிலேயே பிக் பாஸ் டாஸ்கை குடுத்து ஹவுஸ் மேட்களை கதறவிட்டார். மேலும் ஷிவானியை அனைவரும் டார்கெட் செய்து வந்தனர். மேலும் சுரேஷ் மற்றும் அனிதாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மக்கள் அனைவரும் சுரேஷ் அவர்களுக்கு எதிராக பேசி வந்தனர். மேலும் சனம் ஷெட்டி நடிப்பதாகவும் ரமேஷ் கூறிவந்தார். இது ஒரு புறம் இருக்க ஷிவானிக்கும் பாலாஜிக்கும் இடையே தற்போது நட்பு மலர்ந்துள்ளது. இது நட்பாக மட்டும் இருக்குமா?? என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.
நேற்றும் சண்டையில் முடிந்த பிக் பாஸ் எபிசோட், இன்றும் சண்டையிலேயே ஆரம்பித்துள்ளது. அதே அனிதா மற்றும் சுரேஷ் இடையே தான் சண்டை ஆரம்பித்துள்ளது. ஆனால் தற்போது மக்கள் ஆதரவு சுரேஷ் பக்கம் திரும்பியுள்ளது. அனிதாவின் செய்கை ஏதோ குழந்தைகள் அடம் பிடிப்பது போல உள்ளது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஒரு வேளை சண்டை போட்டால் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்று நினைக்கிறாரோ?? நேற்று வரை சுரேஷ் அவர்களை திட்டி கொண்டிருந்த மக்கள் தற்போது அவருக்கு ஆதரவாக பச்சை கொடி கட்டி வருகின்றனர். நாளுக்கு நாள் யார் எப்படி எல்லாம் மாறுகிறார்கள் என்பதே தெரியவில்லை. இதே போல அனிதா செய்து வந்தால் விரைவில் வெளியேற கூட வாய்ப்புள்ளது.