மக்களின் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 4 தற்போது கலைகட்டியுள்ளது என்றே சொல்லலாம். இது வரையிலும் பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 இல் தற்போது 17வதாக அர்ச்சனாவை களமிறக்கியுள்ளது பிக் பாஸ். வந்த முதல் நாளே சுரேஷை கடுப்பாக்கியுள்ளார் அர்ச்சனா.
பிக் பாஸ் சீசன் 4
பல தடங்கல்களை மீறி பிக் பாஸ் சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. ஜூன் மாதமே ஒளிபரப்பாக இருந்த இந்த சீசன் கொரோனா காரணமாக தற்போது தொடங்கியுள்ளது. ஆரம்ப நாளிலேயே பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகள் ஏற்பட்டதை நாம் பார்த்தோம்.
ஹவுஸ் மேட்கள் இடையே பல சண்டைகளும் போய்க்கொண்டுள்ளது. இதற்கிடையில் பல டாஸ்குகளை கொடுத்து பிக் பாஸ் மேலும் சண்டையை ஏற்படுத்தி வருகிறார். தற்போது வைல்ட்கார்டு என்ட்ரியாக அர்ச்சனாவை களமிறக்கியுள்ளது. ஏற்கனவே அர்ச்சனாவுக்கு பேசவா சொல்லி தரவேண்டும்?? வந்த நாளிலேயே அனைவரையும் கலாய்த்து தள்ளியிருக்கிறார்.
மேலும் சுரேஷ் சக்கரவர்த்தியை கிண்டலடித்து வெறுப்பேற்றும் வகையில் பேசியுள்ளார். இதனால் சுரேஷ் கடுப்பாகி சக போட்டியாளர்களிடம் இருந்து விலகி தனியாக செல்கிறார். வந்த முதல் நாளே சுரேஷ் சக்கரவர்த்தியை கார்னர் செய்து கடுப்பாக்கி வெளியில் அனுப்பி விட்டார் அர்ச்சனா. இந்த ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
இதனால் பலரும் அர்ச்சனாவுக்கு எதிராக பேசி வருகின்றனர். மேலும் சுரேஷ் ஒரு வகையான தந்திரத்தை பயன்படுத்தி விளையாடுகிறார் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. இப்பொழுது அர்ச்சனா வெளியில் இருந்து அனைத்தையும் பார்த்து வந்ததால் சுரேஷ் சக்கரவர்த்திக்கு எதிராக பேசி வருகிறார். மேலும் வரும் எபிசோடுகளில் சுரேஷ் மற்றும் அர்ச்சனா இடையே பல ரணகளங்கள் உருவாக உள்ளது என்பது தெரிகிறது.