Tuesday, March 26, 2024

தமிழகத்தில் லேசானது முதல் மிதமாக மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Must Read

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக எல்லா மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

லேசான மழை:

தமிழகத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகின்றது. அதே போல் கடந்த சில நாட்களாக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றும் வீசுகிறது. இன்றைய வானிலை அறிக்கையில் கூறப்பட்டதாவது, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி மற்றும் பரவலாக அனைத்து பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

அக்டோபர் 17 ஆம் தேதி தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது.

வெப்பநிலை மற்றும் மழைப்பதிவு:

தமிழகத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியாறு பகுதியில் அதிகபட்சமாக 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

வந்த முதல் நாளிலேயே சுரேஷை கடுப்பாக்கிய அர்ச்சனா – களைகட்டும் பிக் பாஸ் ப்ரோமோ!!

சித்தார், சிவலோகம் பகுதிகளில் 4 செ.மீ, குறைந்தபட்சமாக நாகர்கோவில், ராதாபுரம், வால்பாறை பகுதிகளில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கும் வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரி கடலோர பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி & HRA உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி (DA) 4 சதவீதம் உயர்த்தியது முதல் பல்வேறு மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கு DA உயர்வை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -