அர்ச்சனா இல்லாமல் வெறித்தனமாக விளையாடும் ரியோ, சோம் – சூடுபிடிக்கும் பிக் பாஸ் போட்டிக்களம்!!

0

பிக் பாஸ் சீசன் 4 தற்போது 70வது நாளை கடந்துள்ளது. நேற்றைய எபிசோடு சுத்த போர் சொல்லலாம். அர்ச்சனா வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்து வீட்டில் சண்டை எதுவும் இல்லாததால் சற்று போர் அடிக்க தான் செய்கிறது. இந்நிலையில் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பால் கேட்ச் டாஸ்க் போயிக் கொண்டுள்ளது. இரவு, பகல் என போட்டியாளர்கள் யாரும் தூங்காமல் இந்த டாஸ்கை செய்து வருகின்றனர். இத்தனை நாட்கள் பப்பெட் என்று கிண்டல் செய்து வந்த சோம் நேற்று வெறித்தனமாக விளையாடியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை நாட்கள் அர்ச்சனா இருந்தபோது ரியோ, சோம் இப்படி விளையாடி பார்த்ததும் இல்லை. பாலாவிடமும் நிறைய மாற்றங்கள் இருக்க தான் செய்கிறது. எதற்கும் இறங்கி போகாத பாலா முந்தைய எபிசோடில் ஷிவானி கோவித்துக் கொண்டார் என்பதற்கு அவர் பின்னாடியே சுற்றியது ஷாக்காக தான் இருந்தது.

மேலும் ரசிகர்களின் கமென்ட்டை வைத்து பார்க்கும்போது நேற்றைய எபிசோடை அவ்வளவாக ஆர்வமாக யாரும் பார்த்திருக்கவில்லை. தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது முதல் ப்ரோமோவில் இத்தனை நாட்களாக இரண்டு அணியாக பிரிந்து பால் கேட்ச் கேம் விளையாடியவர்கள் இனி தனியாக விளையாட வேண்டும்.

“அண்ணாத்த” பட ஷூட்டிங்கில் 8 பேருக்கு கொரோனா!!

பஷர் அடிக்கும்போது பிளாஸ்மா டிவியில் போட்டியாளர்களின் பெயர் குறிப்பிடப்படும். அந்த போட்டியாளர்கள் அந்த பந்தை வேகமாக சென்று கேட்ச் பிடிக்க வேண்டும். சோம் வந்த நேரத்தில் 3 பந்துகளை பிடிக்கிறார். கடைசியாக ரம்யாவிற்கு பந்துகள் வரவே இல்லை.

இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் தூங்கி வழிய ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என்ற பாட்டை போட்டு விடுகிறார் பிக் பாஸ். மேலும் பிளாஸ்மா டிவியில் இந்த கேமை விளையாடிய வீடியோவை போட்டு விட அதனை வைத்து போட்டியாளர் வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் ஆரிக்கும், ரியோவிற்கும் சண்டை ஏற்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here