“அண்ணாத்த” பட ஷூட்டிங்கில் 8 பேருக்கு கொரோனா – தனிமைபடுத்திக் கொண்ட ரஜினிகாந்த்!!

0

நடிகர் ரஜினிகாந்த நடித்து வரும் “அண்ணாத்த” பட ஷூட்டிங்கில் தற்போது வேலை பார்த்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பட ஷட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இதனால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

“அண்ணாத்த” படப்பிடிப்பு:

நடிகர் ரஜினிகாந்த், குஷ்பூ, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் “அண்ணாத்த”. இந்த படத்தினை பிரபல இயக்குனர் ‘சிறுத்தை சிவா’ இயக்கி வருகிறார். இவர் தல அஜித்தை வைத்து பல படங்களை இயக்கி பெயர் பெற்றவர். இந்த படத்திற்கான ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் தனி விமானத்தில் சென்றார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தனது பிறந்தநாளை கூட படப்பிடிப்பு குழுவினருடன் கொண்டாடினார். சூட்டிங்கில் ரஜினிகாந்த் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை பார்ப்பதாக கூட தெரிவிக்கப்பட்டது. படப்பிடிப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரி வர பின்பற்று வந்த நிலையில், அங்கு வேலை பார்த்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

பிரபல திரைப்பட இயக்குனர் திடீர் மூளைச்சாவு – அதிர்ச்சியில் மோலிவுட்!!

இதனால் ஹைதராபாத்தில் ராமோஜி திரைப்பட நகரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தன்னைத்தானே 14 நாட்கள் தனிமைபடுத்திக் கொள்ள உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here