விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் களமிறங்கிய, நடிகை ஜூலி தனக்கு திரைத்துறை வாய்ப்பு வராததால் நொந்து போய் ஜீ தமிழ் சீரியலுக்கு என்ட்ரி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை சோகம் :
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில், போட்டியாளராக நுழைந்தவர் ஜூலி. ஆனால், இவருக்கான மதிப்பு இந்த நிகழ்ச்சியில் கிடைக்காததால், ரசிகர்களால் மோசமாக விமர்சிக்கப்பட்டார். தனது இமேஜை மாற்ற, மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் சீசனில் கலந்து கொண்டு, ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.
தொடர்ந்து, கலைஞர் டிவி உள்ளிட்ட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என ஆசைப்பட்டு, அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வாய்ப்புகளைத் தேடி வந்தார். ஆனால், இவருக்கு எதிர்பார்த்த திரை வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதையடுத்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் இவர் இணைந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், இப்படி திரை வாய்ப்பு தேடி நொந்து போய் கடைசியில் சீரியலில் களமிறங்கி விட்டார் ஜூலி என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்