பிக் பாஸ் வீட்டில் புகுந்த வெள்ளம் – போட்டியாளர்கள் வெளியேற்றம்!!

0

நிவர் புயல் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் கடற்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் பலரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த வீட்டிலும் நீர் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு மக்களின் பல நாட்கள் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்டிருந்தது. மேலும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் முன்னரே போட்டியாளர்கள் பலரும் ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இதுவரையிலும் நல்லபடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக நிவர் புயல் காரணமாக கரையோரத்தில் இருக்கும் மக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இப்பொழுது தான் கொரோனா ஒரு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் நிவர் புயல் மக்களை பாடுபடுத்தி வருகிறது.

சென்னையில் தொடர்ந்து பெய்யும் மழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. பல வீடுகளில் நீர் புகுந்து தங்குவதற்கு கூட இடம் இல்லாமல் தவித்தும் வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலும் நேற்று நீர் புகுந்துள்ளது. என்ன செய்வது என்று புரியாமல் போட்டியாளர்கள் அனைவரும் பதட்டத்தில் இருந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியாளர்கள் அவர்கள் அங்கிருந்து அழைத்து சென்று பூந்தமல்லியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்கவைத்துள்ளனர். இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவும் விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

தற்போது இந்த வீட்டில் வெள்ளம் புகுந்ததை அடுத்து எப்பொழுது மறுபடியும் ஆரம்பிப்பார்கள் என்பது தெரியவில்லை. இந்த வாரத்தில் வேறு கமலஹாசன் வரும் எபிசோடு ஷூட்டிங் நடக்குமா?? என்பது கேள்விக்குறியே. மேலும் பலரும் இந்த சீசன் இதோடு முடிவடைந்து விடுமோ என்ற பயத்திலும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here