காதல் திருமணம் எந்த ராசிக்காரர்களுக்கு நடக்கும். எந்த கிரகம் எந்த இடத்தில் அமைந்திருந்தால் காதல் உணர்வு ஏற்படும் என்பதை பார்க்கலாம். அனைவருக்கும் காதல் கை கொடுப்பதில்லை. சிலருக்கு மட்டுமே அந்த யோகம் கிடைக்கிறது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்குமே காதல் உணர்வு ஏற்படுகிறது. காதல் இயற்கையாக வரக்கூடிய ஒரு உணர்வு.
காதல் யாருக்கு கைகொடுக்கும்:
காதல் என்பது பொதுவான ஓன்று. காதலை யாராலும் தடுக்கவும் முடியாது, பிரிக்கவும் முடியாது. அனைத்து உயிர்களுக்குமே ஒருமுறையாவது காதல் கண்டிப்பாக வந்து. சிலபேர் உண்மையான காதல் உணர்வுகளை புரிந்து கொண்டு காதலில் வெற்றியடைவார்கள். சிலருக்கு என்னதான் தவம் இருந்தாலும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. இதற்கு காரணம் நம் கிரக அமைப்பு ஆகும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஒருவருக்கு பிறந்த ஜாதகத்தில் 5-ம் இடம் வலுவாக இருந்தால் தான் காதல் உணர்வு ஏற்படும். சிலர் காதல் வந்தும் அதை உரியவர் இடத்தில் சொல்ல மாட்டார்கள் இதற்கு 3-ம் இடம் வலுவாக இல்லை என்று அர்த்தம். 3-ம் இடம் வலுவாக இருந்தால் மட்டுமே தன் காதலை மற்றவர்களிடம் வெளிப்படுத்த முடியும்.மேலும், 7-ம் இடம் வலுவாக இருந்தால் தான் இந்த காதல் திருமணத்தில் முடியும்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
காதலிப்பவர்கள் அனைவரும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. கருத்து வேறுபாடு காரணமாக பல சண்டைகளையும், குடும்ப சூழ்நிலைகளையும் சந்திப்பார்கள். எந்த விதமான மகிழ்ச்சியையும் அனுபவிக்காமல் பிரச்சனைகளை மட்டுமே பார்த்து கொண்டிருப்பார்கள். 11-ம் இடம் வலுவாக இருந்தால் மட்டுமே இந்த பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் மகிழ்ச்சியான காதல் வாழ்க்கையை முடியும்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஒருவர் ஜாதகத்தில் 5-ம் அதிபதி, 7-ம் இடத்திலும், 7-ம் அதிபதி 5-ம் இடத்திலும், இரண்டு அதிபதிகளும் ஒரே இடத்தில் சேர்ந்து இருந்தாலோ காதல் அமைப்பு ஏற்படும். காதல் வாழ்க்கையை தாண்டி திருமணத்தில் அனைத்து செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால், உங்கள் ராசியில் இருந்து 6,8 -ம் ராசிக்காரர்களை திருமணம் செய்ய கூடாது. அதை மீறி திருமணம் செய்தால் திருமண வாழ்க்கை நீடிக்காது.