விஜய் டிவியில் நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர் ஒருவர் தன் விவகாரத்தை அறிவித்துள்ளார்.
பிக் பாஸ் பிரபலம் விவகாரத்து:
விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோ, சீரியல், சமையல் ஷோ போன்ற அதிகமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் டெலிகாஸ்ட் செய்யப்படுகிறது. அதில் மக்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் என்றால் அது மிகையாகாது. மேலும் விஜய் டிவியை டிஆர்பியில் முதல் இடத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி பிடித்து தந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்களின் வரவேற்பை பெற்ற இந்த ஷோ 5 சீசன்களை கடந்திருக்கிறது.
அதில் பிக் பாஸ் 2-வில் கலந்து கொண்ட பிரபலம் தான் ஆர்.ஜே.வைஷ்ணவி. அதன் பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு 3 வருடம் காதலித்த தன் காதலன் அஞ்சான் என்பவரை கரம் பிடித்தார். இந்நிலையில் திடீரென சமூக வலைத்தளங்களில் தன் விவகாரத்து பதிவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் இன்னும் அவரை லவ் பண்ணுகிறேன். இருந்தாலும் எங்கள் உறவில் அழுத்தம் ஏற்படுவதாலும் நண்பர்களாக ஆக இருப்பதே மேல் என முடிவெடுத்துள்ளோம்.
இதற்காக யாரும் வருந்த வேண்டாம் என்றும் மகிழ்ச்சியுடன் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம், ஏன் இந்த முடிவை எடுத்தோம் என யாரும் யூகிக்க வேண்டாம். நாங்கள் இன்னும் நண்பர்களாகவே இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். சமீப காலமாக திரை பிரபலங்கள் பலர் விவாகரத்து செய்தியை அறிவித்து வருகின்றனர். தற்போது வைஷ்ணவியும் தன் கணவரை பிரிந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.